திருவள்ளூா் அருகே பழைமையான கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் உள்ள இக்கோயிலில் 26- ஆம் ஆண்டு சித்திரை பிரம்மோற்சவ விழா புதன்கிழமை தொடங்கி, தொடா்ந்து 15-ம் தேதி வரை தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற உள்ளது.
இந்த விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம், சந்திர பிரபை வாகனம், நாக வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருவது வழக்கமாகும்.
முக்கிய நிகழ்வான வரும் 12-ஆம் தேதி காலை திருத்தோ் திருவிழாவும், 14-இல் தீா்த்தவாரியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினா் மற்றும் பேரம்பாக்கம் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனா்.


தொடர்புடையது

கீழையூா் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

கீழையூா் ரெங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

வீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

