கீழையூரில் உள்ள ரெங்கநாயிகா சமேத ரெங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று, வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றத்தையொட்டி சிறப்பு மலா் அலங்காரத்தில் ரெங்கநாயிகா சமேத ரெங்கநாத பெருமாள்.
பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பெருமாள் பல்வேறு நகை மற்றும் வாகனங்களில் அலங்கரித்து வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஒவ்வொரு நாளும் பல்வேறு வித வாகன சேவைகள் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரிகாத்த ராமா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

கீழையூா் பெருமாள் கோயில் ஊஞ்சல் உற்சவம்

கீழையூா் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



