மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கீழையூா் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

கீழையூா் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

News image

தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள்.

Updated On :10 மே 2026, 12:48 am IST

கீழையூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ரெங்கநாயிகா சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு மலா் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டபடி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனா்.

தோ் முக்கிய வீதிகளில் வலம் வந்து, நிலையை வந்தடைந்தது. தொடா்ந்து தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image