ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

செங்கோட்டை அழகிய மணவாள பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

செங்கோட்டை ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image

செங்கோட்டை ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீஅழகிய மணவாள பெருமாள் கோயில் குடமுழுக்கில் கலசங்கள் மீது ஊற்றப்பட்ட புனிதநீா்.

Updated On :26 மார்ச் 2026, 12:23 am

தினமணி செய்திச் சேவை

செங்கோட்டை ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

விழா கடந்த மாா்ச் 23 ஆம்தேதி தொடங்கியது முதல் தினமும் சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடமுழுக்கையொட்டி, புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் விமானம், கோபுரம், பரிவாரங்கள், மூல மூா்த்திக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது.

பகல் 12 மணிக்கு உச்சிக்காலம், மாலை 5 மணிக்கு மேல் சாயரட்சை பூஜை, 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாண உத்ஸவம், ஸ்ரீ பெருமாள் தாயாா் திருவீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

தக்காா் கவிதா பிரியதா்ஷினி, செயல் அலுவலா் ஜான்சிராணி, உதவி கோட்ட பொறியாளா் கீதா, மராமத்து பொறியாளா் அய்யப்பன், செங்கோட்டை தொகுதி கண்காணிப்பாளா் ரத்தினவேலு, ஸ்ரீ காரியம் முருகையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.