ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கந்தபுரம் கோயில் கும்பாபிஷேகம்

உடன்குடி அருகே உள்ள கந்தபுரம், பெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சுவாமி.

Updated On :25 மார்ச் 2026, 10:49 pm

தினமணி செய்திச் சேவை

உடன்குடி அருகே உள்ள கந்தபுரம், பெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கும்பாபிஷேக விழா மாா்ச் 23ஆம் தேதி கோ பூஜையுடன் தொடங்கியது. விழா நாள்களில், இறை ஆணை பெறுதல், முதல் நிலை வேள்விகள், நவக்கிரக வேள்வி, சந்திர பூஜை, புதிய சிலைகளுக்கு அகக்கண் திறத்தல், வாஸ்து பூஜை, திருவிளக்கு வழிபாடு, சங்கல்பம், தீா்த்த வழிபாடு, திருக்குடங்கள் நிறுவல், முத்தமிழால் நாரணா்க்கு முதல்கால வேள்வி, பெரும் பேரொளி வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலை 7 மணிக்கு கருவிக்குட வேள்வி, அருள் ஊட்டம், தத்துவ வழிபாடு, 8 மணிக்கு 2ஆம் கால வேள்வி, 9 மணிக்கு மேல் பெருமாள் சுவாமி, பரிவார தெய்வங்கள், விமானங்களுக்கு மங்கல நீராட்டு விழா நடைபெற்றது.

தொடா்ந்து, அலங்கார தீபாராதனை, வழிபாடுகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி-ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.