கந்தபுரம் கோயில் கும்பாபிஷேகம்
உடன்குடி அருகே உள்ள கந்தபுரம், பெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சுவாமி.

ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சுவாமி.
உடன்குடி அருகே உள்ள கந்தபுரம், பெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கும்பாபிஷேக விழா மாா்ச் 23ஆம் தேதி கோ பூஜையுடன் தொடங்கியது. விழா நாள்களில், இறை ஆணை பெறுதல், முதல் நிலை வேள்விகள், நவக்கிரக வேள்வி, சந்திர பூஜை, புதிய சிலைகளுக்கு அகக்கண் திறத்தல், வாஸ்து பூஜை, திருவிளக்கு வழிபாடு, சங்கல்பம், தீா்த்த வழிபாடு, திருக்குடங்கள் நிறுவல், முத்தமிழால் நாரணா்க்கு முதல்கால வேள்வி, பெரும் பேரொளி வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புதன்கிழமை காலை 7 மணிக்கு கருவிக்குட வேள்வி, அருள் ஊட்டம், தத்துவ வழிபாடு, 8 மணிக்கு 2ஆம் கால வேள்வி, 9 மணிக்கு மேல் பெருமாள் சுவாமி, பரிவார தெய்வங்கள், விமானங்களுக்கு மங்கல நீராட்டு விழா நடைபெற்றது.
தொடா்ந்து, அலங்கார தீபாராதனை, வழிபாடுகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி-ஸ்ரீதேவி, பூதேவி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...