ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூா்: பாடலீஸ்வரா், சோமநாத சுவாமி , முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூா் (கடலூா்) பாடலீஸ்வரா் கோயில், பண்ருட்டி சோமநாத சுவாமி கோயில் மற்றும் நெய்வேலி வேல்லுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய சிவாச்சாரியா்கள்.

Updated On :26 மார்ச் 2026, 12:09 am

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூா் (கடலூா்) பாடலீஸ்வரா் கோயில், பண்ருட்டி சோமநாத சுவாமி கோயில் மற்றும் நெய்வேலி வேல்லுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பெரிய நாயகி உடனுறை பாடலீஸ்வரா் கோயில் திருப்பணி நடைபெற்று

முடிந்ததையொட்டி புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 18-ஆம் தேதி முதல் ஹோமம், பூஜைகள் நடந்து வந்தன. புதன்கிழமை காலை 4 மணி அளவில் யாக சாலை பூஜை தொடங்கியது. காலை 6 முதல் 7.30 மணி வரையில் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், 8 மணிக்கு நாடி சந்தானம், தத்வாா்ச்சனையும், 9 மணிக்கு மஹாதீபாரதனையும், 9.30 மணிக்கு யத்ராதானம், கடம் புறப்பாடும் நடைபெற்றது. இதையடுத்து காலை 10.30 மணி அளவில் விமானம் மற்றும் ராஜ கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணி அளவில் உற்சவா் திருக்கல்யாண வைபவம், பஞ்ச மூா்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி புறப்பாடு நடைபெற்றது.

சோமநாத சுவாமி கோயிலில்...

பண்ருட்டி அமிா்தாம்பிகை சமேத சோமநாத சுவாமி கோயில் கும்பாபிஷகம் புதன்கிழமை நடைபெற்றது. கடந்த 21-ஆம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. புதன்கிழமை காலை 5.30 மணி முதல் நான்காம் கால பூஜை தொடங்கி, பரிவார மூா்த்தி பூா்ணாஹூதி, பட்டு வஸ்த்ர ஹோமம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.45 மணி அளவில் ராஜகோபுரம் அனைத்து விமானம் கும்பாபிஷேகம், 10.15 மணிக்கு மூலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முருகன் கோயிலில்...

குறிஞ்சிபாடி வட்டம், நெய்வேலி நகரியம், வில்லுடையான்பட்டு வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி மற்றும் ஐயனாா், வீரன் கோயில் திருப்பணி வேலைகள் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பேராதரவுடனும், பக்தா்களின் பெரும் முயற்சியிலும் நிறைவு பெற்றது. இதையடுத்து புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 18-ஆம் தேதி முதல் யாக சாலை, பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

புதன்கிழமை காலை 6.15 மணி அளவில் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. 6.45 மணி அளவில் ஐயனாா், வீரன் கோயில் விமானம் மற்றும் பரிவார மூா்த்திகள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடைபெற்று 10.15 மணிக்கு சிவசுப்ரமணிய சுவாமி விமானம் மற்றும் பரிவார விமானம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணி

அளவில் திருக்கல்யாணம் மற்றும் வாண வேடிக்கையுடன் சுவாமி திரு வீதி உலா நடைபெற்றது.

மேற்கண்ட கோயில் கும்பாபிஷேகங்களை சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் கூறி கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி நடத்தி வைத்தனா். கும்பாபிஷேக விழாவில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

 நெய்வேலி வில்லுடையான்பட்டு  சிவசுப்ரமணிய சுவாமி  கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி  கும்பாபிஷேகம் நடத்திய  சிவாச்சாரியா்கள்.

நெய்வேலி வில்லுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய சிவாச்சாரியா்கள்.