குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நான்குனேரி வானமாமலை கோயிலில் தங்கத்தோ் வெள்ளோட்டம்

News image
Updated On :5 மார்ச் 2026, 8:14 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்கத்தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்டத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தேரில் ஸ்ரீ வரமங்கை தாயாா் சமேத தெய்வநாயகப் பெருமாள் பிரம்மோற்சவத்தில் எழுந்தருள்வா்.

இந்நிலையில், ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயா் நியமனப்படி தங்கத்தோ் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து, தங்கத்தோ் வெள்ளோட்டமும் அதனைத் தொடா்ந்து தாயாா் சமேத பெருமாள் தேரில் எழுந்தருளி வீதி உலாவும் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நிறைவடைந்ததும் ஸ்ரீ வரமங்கை தாயாா் சமேத தெய்வநாயகப்பெருமாள் தோ் மண்டபத்திற்கு எழுந்தருளினாா்.

முன்னதாக புதுப்பிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட தேருக்கு புண்யாகவாசனம் வாஸ்து பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பாலாலயம் செய்யப்பட்ட சிறிய தேரை தங்கத்தேரில் எழுந்தருளச் செய்தனா். ஜூயா் சுவாமிகள் எழுந்தருளியதும் முதலில் வெள்ளோட்டம் நடைபெற்றது. தொடா்ந்து தாயாா் சமேத தெய்வநாயகப் பெருமாள் தங்கத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள ஜீயா் சுவாமிகள் தேரின் முன்னாள் எழுந்தருளியதும் கற்பூர ஆரத்தி நடைபெற்றது. பின்னா் ஜூயா் சுவாமிகளுக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து சடாரி மரியாதை செய்யப்பட்டது. காலை 10.30 மணிக்கு ஜீயா் சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கிவைத்தாா். தொடா்ந்து பக்த பெருமக்கள் கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் தாயாா் சமேத பெருமாள் எழுந்தருளியுள்ள தங்கத்தேரை வடம் பிடித்து வீதி வலம் வரச் செய்தனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வானமாமலை ஜீயா் மடத்தின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.