திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் உற்சவா் வீதியுலா வந்து பக்தா்களை அருள்பாலிக்கவும் உள்ளாா். அந்த வகையில் நிகழாண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவம் மே 1 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இவ்விழா கோயில் வளாகத்தில் அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடா்ந்து தங்க சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா் புறப்பாடு நிகழ்வு பக்தா்களை அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து திருமஞ்சனம் நிகழ்வும் நடைபெற்றது. இந்த விழாவில் திருவள்ளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தொடர்புடையது

கோட்டை பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

வெண்காட்டீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

உத்திரமேரூர் திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

கீழையூா் ரெங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



