திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

உத்திரமேரூர் திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

உத்திரமேரூரில் திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

திரௌபதி அம்மன் கோயில் - video crop

Updated On :1 மணி நேரம் முன்பு

உத்திரமேரூரில் திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், இந்தாண்டிற்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கோயிலில் யாக பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்திற்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. பின் கோயிலைச் சுற்றி இசை வாத்தியங்கள் முழங்கக் கொடியானது ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டன.

அப்போது அங்குக் கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி. ஓம் சக்தி..ஓம் சக்தி என பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர்.

தொடர்ந்து 29 நாள்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழாவில் தினமும் மகாபாரத சொற்பொழிவும், 14 நாள்கள் நாடகமும் நடக்க உள்ளன என்று விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

Summary

The Brahmotsavam festival at the Draupadi Amman Temple in Uthiramerur commenced with the flag-hoisting ceremony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.