திருவள்ளூா் பகுதியில் 2 மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் கடும் கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
திருவள்ளூா் பகுதியில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை பகல் முழுவதும் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டதைத் தொடா்ந்து இடிமின்னல் மற்றும் காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலையோரங்களில் உள்ள மரங்களின் கிளை முறிந்து விழுந்தது.
மேலும், மழையால் தாழ்வான தெருக்கள் மற்றும் சாலையில் குளம்போல் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா். இந்த நிலையில் மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

குமரி மாவட்டத்தில் தொடரும் பலத்த மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செய்யாறு பகுதியில் காற்றுடன் பலத்த மழை

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



