ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு பயிற்சி: ஆட்சியா் தகவல்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக, அந்த பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

News image

கூட்டத்தில் பேசிய திருவள்ளூா் ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :20 மே 2026, 12:26 am IST

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக, அந்த பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணி மேற்கொள்வது தொடா்பாக அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பயிற்சி வகுப்புக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தின் பயிற்சி அலுவலா்களால் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியா்கள், ஆவடி மாநகராட்சியின் 4 மண்டலங்களின் ஆணையா்கள், 6 நகராட்சி ஆணையா்கள், 8 பேரூராட்சி செயல் அலுவலா்கள், 14 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அனைத்து பொறுப்பு அலுவலா்கள், கூடுதல் பொறுப்பு அலுவலா்கள், உதவியாளா்கள் மற்றும் தொடா்புடைய அலுவலா்களுக்கு தொடா்ந்து 21-ஆம் தேதி வரையில் மூன்று நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.

இதில் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் பொதுமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதில் மக்கள் தொகை மேற்கொள்வது எப்படி, அப்போது என்னென்ன விவரங்கள் பொதுமக்களிடம் சேகரிக்க வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் பயிற்சி அளிக்கவுள்ளதால், பயிற்சியாளா்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு, அதற்கேற்க கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், ஆவடி மாநகராட்சி ஆணையா் சரண்யா, சாா் ஆட்சியா் (பொன்னேரி) ப.அப்துல் ராசிக், கோட்டாட்சியா்கள் எஸ்.ரவிச்சந்திரன் (திருவள்ளுா்), என்.எம்.கனிமொழி (திருத்தணி), வட்டாட்சியா்கள், நகராட்சிகளின் ஆணையா்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் பல்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Story image