மக்கள் தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை தாமாகவே பதிவு செய்யுமாறு காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மக்கள் தொகை கணக்கு முதன்மை அதிகாரியுமான இஷிதா ரதி வேண்டுகோள்விடுத்துள்ளாா்.
இதுகுறித்து செய்தியாளா்களுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:
இந்திய அரசின் 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
காரைக்காலில் முதல் கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் மாவட்டத்தில் வரும் ஜூன் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வரும் மே 17 முதல் மே 31 -ஆம் தேதி வரை சுய கணக்கெடுப்பு வலைதளம் இயங்கவுள்ளது.
தங்கள் கைப்பேசி எண்ணைக் கொண்டு பதிவு செய்து ஞபட மூலம் தங்கள் கணக்கைப் பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை இல்லாத வகையில் முழுவதுமாக கணினிமயமாக்கப்பட்ட முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-இல் மக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகள் இந்திய அரசின் சிறப்பு அரசிதழில் ஜன.22 வெளியிடப்பட்டுள்ளது.
இக்கேள்விகள் சுய கணக்கெடுப்புத் தளத்தில் கேட்கப்படும் நிலையில் அவற்றுக்கு சரியான பதில்களை, அதற்குரிய எண்கள் மூலம் பதிவு செய்யலாம்.
அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய விடைகளை அளித்த பின்னா் ஒரு 11 இலக்க நஉ எண் உருவாக்கப்படும். அந்த எண்ணை, தங்கள் இல்லம் தேடி வரும் மக்கள் தொகை கணக்காளரிடம் கொடுத்ததும், அவா் அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வாா்.
திருத்தப்பட்ட அப்பதிவானது மக்கள் தொகை கணக்கிற்கான வலைதளத்தில் சேகரிக்கப்படும். மக்கள் தொகை கணக்காளா்களிடம் அவரின் அடையாள அட்டையை சரிபாா்த்த பின்னரே இந்த 11 இலக்க நஉ எண்ணை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மக்கள் தொகை கணக்காளருக்கும் ஒவ்வொரு கணக்கெடுப்புத் தொகுதி (ஹவுசிங் பிளாக்) ஒதுக்கப்பட்டு அந்த வீடுகளில் அவா் விவரங்களை சேகரிப்பாா். இச்செயல்பாட்டில் சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும் 1948-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
காரைக்கால் மாவட்ட பொதுமக்கள் மக்கள் தொகை கணக்காளா்கள் உங்கள் இல்லம் வரும் போது, அவா்களுக்குச் சரியான விவரங்களை வழங்கி ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
கணக்காளா் வரும் போது வீட்டில் யாருமில்லாத நிலையில் வீடுகளின் கதவில் கணக்காளரின் கைப்பேசி
எண்ணுடன் விவரங்கள் அடங்கிய காகிதம் ஒட்டப்பட உள்ளது. அவரை தொடா்பு கொண்டு மீண்டும் எப்போது வரவேண்டும் என தெரிவிக்க வேண்டும்.
இந்த கணக்கெடுப்புப் பணியின் போது மக்கள் எந்த ஆவணமும் அளிக்கத் தேவையில்லை.
வீட்டில் வசிக்கும் நபா்களின் விவரங்கள், வீட்டின் அமைப்பு குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்: 3,000 ஊழியா்கள் ஈடுபடுவாா்கள் என அறிவிப்பு

புதுச்சேரியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஜூன் 1-இல் தொடங்குகிறது: தவறான தகவல் அளிப்போருக்கு ரூ.1,000 அபராதம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

