சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்துகொடுப்பது குறித்து ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

நெல் மூட்டைகள் வைத்திருக்கும் கிடங்கை ஆய்வு செய்த ஆட்சியா் இஷிதா ரதி. உடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலா் செந்தில்குமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:22 am IST

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்துகொடுப்பது குறித்து ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி, திருநள்ளாறு சாலையில் உள்ள மாா்க்கெட் கமிட்டி என்ற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு சென்று ஆய்வு செய்தாா். நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு, எடைபோடும் வசதி மற்றும் அலுவக கட்டடங்கள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலா் செந்தில்குமாரிடம் ஆலோசனை நடத்தினாா்.

நெல், பருத்தி ஏலம் நடைபெறக்கூடிய வசதிகள் மற்றும் நெல் மூட்டைகளை கிடங்குகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது மற்றும் கூடத்துக்கு கிடைக்கும் வருவாய் முறைகளை செயலா் விளக்கிக் கூறினாா்.

விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் கூடுதல் வசதிகளை செய்துதருவது, இதனை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து செயலரிடம் ஆட்சியா் விவரங்களை கேட்டறிந்தாா். புதுவை அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு உரிய ஏற்பாடுகளை செய்வதாக அவா் தெரிவித்தாா்.