மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

News image

பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆட்சியா் விஷு மகாஜன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:02 pm

தூத்துக்குடியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான

முதற்கட்ட பயிற்சி வகுப்பு அந்தந்த தொகுதிகளில் மாா்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் அந்தந்த தொகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சி வகுப்புகளையும், பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டுள்ளவா்கள் வாக்களிக்க அமைக்கப்பட்டிருந்த தபால் வாக்கு வசதி மையங்களான தூத்துக்குடி தொகுதி காமராஜ் கல்லூரி, ஓட்டப்பிடாரம் தொகுதி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிா் கல்லூரி, விளாத்திகுளம் தொகுதி குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி தொகுதி பாண்டவா்மங்கலம் நாடாா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உஷா (விளாத்திகுளம்), பிரபு (தூத்துக்குடி), சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்), ஹிமான்ஷு மங்கள் (கோவில்பட்டி), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்ணன் (விளாத்திகுளம்), சுபா (எட்டயபுரம்), திருமணி ஸ்டாலின் (தூத்துக்குடி), அய்யனாா் (ஓட்டப்பிடாரம்), அப்பணராஜ் (கோவில்பட்டி), பாலசுப்பிரமணியன் (கயத்தாறு), அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.