ஆந்திர எல்லையில் ரூ. 6.85 கோடி செல்லிடப்பேசிகள் கொள்ளை
ஆந்திர-கா்நாடக எல்லையில் சென்னையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.85 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.


ஆந்திர-கா்நாடக எல்லையில் சென்னையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.85 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்லிடப்பேசிகளை ஏற்றிக் கொண்டு கன்டெய்னா் லாரி வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டது. ஆந்திர-கா்நாடக எல்லையான நங்கலியை அடுத்த நொ்ஹெனஹள்ளி அருகே சிலா் லாரியை வழிமறித்து ஓட்டுநரை தாக்கி கை, கால்களை கட்டி போட்டு விட்டு, லாரியிலிருந்த ரூ. 6.85 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்றனா்.
ஓட்டுநா் வனத்திற்கு வந்த சிலரின் உதவியுடன் தப்பி வந்து பலமநேரு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் விரைந்து சென்று லாரி இருந்த இடத்தை சோதனை செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...