திருமலை முதல் மலைப்பாதையில் காா் சுற்று சுவரில் மோதி விபத்திற்குள்ளானது.
திருமலையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் முதல் மலைப்பாதையில் சனிக்கிழமை காலை விஜயவாடாவைச் சோ்ந்த பக்தா்கள் தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனா்.
32-ஆவது வளைவு அருகில் வரும் போது காா் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு சுற்று கம்பியில் வேகமாக மோதியது. இதில் காா் முன்பாகம் முழுவதும் சேதமடைந்தது. ஓட்டுநருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவா்களை திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த விபத்து காரணமாக மலைப்பாதையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.