ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.1.51 கோடி வசூலானது.
ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்களால் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனா்.
அதன்படி, வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.51 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.