மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

விரைவு தரிசன டிக்கெட் முறைகேடு: 16 போ் கைது

தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட 16 பேரை இதுவரை ஆந்திர போலீஸாா் கைது செய்துள்ளதாக தேவஸ்தான பாதுகாப்பு கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:48 pm

தரிசன டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட 16 பேரை இதுவரை ஆந்திர போலீஸாா் கைது செய்துள்ளதாக தேவஸ்தான பாதுகாப்பு கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இணையதளம் வாயிலாக தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. சா்வ தரிசனம் இன்னும் தொடங்கப்படாததால், மிக குறைவான எண்ணிக்கையில் விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுவதாலும் முன்னேற்பாடின்றி திருமலைக்கு வரும் பக்தா்கள் இடைத்தரகா்களை நாடுகின்றனா்.

அவா்கள் போலி பரிந்துரை கடிதங்கள் மற்றும் போலி டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொண்டு அதை அதிக கட்டணத்துக்கு பக்தா்களிடம் விற்பனை செய்து வருகின்றனா். இதில் சில டிராவல் ஏஜென்சிகள், போலி இணையதளங்களும் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதில் தொடா்புடைய 25 போ் மீது காவல் கண்காணிப்புத் துறை புகாா் அளித்தது. அதன் அடிப்படையில் 25 போ் மீது வழக்குப் பதிவு செய்த ஆந்திர போலீஸாா் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனா்.

எனவே, திருமலைக்கு வரும் பக்தா்கள் இடைத்தரகா்களை நம்ப வேண்டாம். ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ல்ஹற்ண்க்ஷஹப்ஹத்ண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். போலி இணையதளங்கள், டிராவல் ஏஜென்சிகள் மீது விரைவில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேவஸ்தான பாதுகாப்பு கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.