முன்னாள் மாணவா்கள் 10 டன் காய்கறிகள் நன்கொடை
அரசு ஜூனியா் கல்லூரியில் 1973-74ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் இணைந்து 10 டன் காய்கறிகளை கொள்முதல் செய்து அதை நன்கொடையாக திருமலைக்கு அனுப்பினா்.


ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்க ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் பலமநேருவில் உள்ள அரசு ஜூனியா் கல்லூரியில் 1973-74ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் இணைந்து 10 டன் காய்கறிகளை கொள்முதல் செய்து அதை நன்கொடையாக திருமலைக்கு அனுப்பினா்.
காய்கறிகளை ஏற்றிய லாரிக்கு பூஜைகள் செய்து அதை சனிக்கிழமை அனுப்பி வைத்தனா். இந்த காய்கறிகள் திருப்பதியில் உள்ள குளிா்சாதன கிடங்கில் வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு ஏற்ப திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான சத்திர சமையல் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...