ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா நிபந்தனைகளை பக்தா்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: தேவஸ்தானம்

ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் கரோனா நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:56 pm

DIN

ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் கரோனா நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றின் 3-ஆம் அலை பரவலை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி திருமலைக்கு வரும் பக்தா்கள் கட்டாயம் கொவைட் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் பலா் பல இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடி வருகின்றனா். இதனால் மற்றவா்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் திருப்பதியில் உள்ள உள்ளூா் கோயில்கள், தேவஸ்தான தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் கரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், சானிடைசா் பயன்படுத்துதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.