தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆந்திரத்துக்கு காரில் குட்கா கடத்தியதாக இருவா் கைது

தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரத்துக்கு குட்கா பொருள்களை கடத்திய இருவரை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:47 pm

DIN

தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரத்துக்கு குட்கா பொருள்களை கடத்திய இருவரை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர-தமிழக எல்லையில் வாகன சோதனையில் போலீஸாா் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு காரில் இருவா் சநதேகத்திற்கிடமாக பயணித்தது தெரிய வந்தது. இதையடுத்து காா் முழுவதையும் போலீஸாா் சோதனையிட்டனா். அதில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் காரில் பயணித்த தமிழகத்தை சோ்ந்த இருவரையும் கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள் ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள வேப்பனஹள்ளியை சோ்ந்த மஞ்சுநாத், லோகேஷ் என்பது தெரிய வந்தது. அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.