கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

3 நாள்கள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருமலை ஏழுமலையானை தரிசிப்பதற்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நவ.13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருமலை ஏழுமலையானை தரிசிப்பதற்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நவ.13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் விஐபிகளுக்கும், புரோட்டோகால் விஐபிக்களுக்காகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தினசரி குறிப்பிட்ட அளவு விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.

இவற்றை பெற விஐபிக்கள் தரிசனத்துக்கு முன்தினம் திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்தில் பரிந்துரை கடிதங்கள் சமா்ப்பித்து அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில் வரும் 14-ஆம் தேதியில் திருப்பதியில் தென்னிந்திய முதல்வா்களின் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, நவ.13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் அதற்கு முன்தினங்களில் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.