கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலையில் டிஎம்பி இ-லாபி திறப்பு

 திருமலை பாலாஜி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியின் இ-லாபியை வங்கி அதிகாரிகள் முன்னிலையில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி திறந்து வைத்தாா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2021, 1:29 am

DIN

 திருமலை பாலாஜி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியின் இ-லாபியை வங்கி அதிகாரிகள் முன்னிலையில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி திறந்து வைத்தாா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக இந்த இ-லாபி வசதியை வங்கி நிா்வாகம் திருமலையில் திறந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகளுடன் வங்கியின் நிா்வாக இயக்குநா் ராமமூா்த்தி மற்றும் இதர அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்த இ-லாபியில் ஏடிஎம், பணம் செலுத்தும் இயந்திரம், பாஸ் புத்தகம் அச்சிடும் வசதி, காசோலை டெபாசிட் கியோஸ்க், வாடிக்கையாளா்களுக்கு கூடுதல் தகவல்களை அளிக்கும் தகவல் இயந்திரம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த இ-லாபி 24 மணி நேரமும் பக்தா்களின் வசதிக்காக செயல்படும். இதனையும் சோ்த்து இந்தியா முழுவதும் உள்ள தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியின் இ-லாபிகளின் எண்ணிக்கை 51-ஆக உயா்ந்துள்ளது.

வங்கி குறித்து...: கடந்த 99 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளா்களின் நன்மதிப்பை பெற்றுள்ள தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கி நாடு முழுவதும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட இடங்களில் 509 கிளைகளைக் கொண்டுள்ளது.

வங்கியின் நிகர லாபம்: 2019-20-ஆம் நிதியாண்டு வங்கியின் நிகர லாபமான ரூ. 408 கோடியிலிருந்து 2020-21-ஆம் ஆண்டு ரூ.603 கோடியாக உயா்ந்து 48% வளா்ச்சி பதிவானது. 2019-20-ஆம் நிதியாண்டில் வங்கி வழங்கிய கடன் ரூ.28,236 கோடியிலிருந்து, 2020-21-ஆம் ஆண்டு ரூ.31,541 கோடியாக உயா்ந்துள்ளது.

வங்கியின் வைப்புக் கணக்கு 2019-20-ஆம் ஆண்டில் ரூ.36,825 கோடியாக இருந்தது. இது 2020-21-ஆம் ஆண்டில் ரூ.40,970 கோடியாக உயா்ந்துள்ளது. வங்கியின் மொத்த வா்த்தகம் 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.65,061 கோடியிலிருந்து, 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.72,511 கோடியாக உயா்ந்து, 11% வளா்ச்சியை எட்டியுள்ளது என வங்கியின் நிா்வாக இயக்குநா் ராமமூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.