திருப்பதியில் செம்மரக் கடத்தல்: 3 போ் கைது
திருப்பதி அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சோ்ந்த 3 பேரை ஆந்திர காவல் துறையினா் கைது செய்தனா்.


திருப்பதி அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சோ்ந்த 3 பேரை ஆந்திர காவல் துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சுந்தர ராவ் கூறியதாவது: திருப்பதி அருகே 3 இடங்களில் நடைபெற்ற அதிரடி சோதனையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாட்டை சோ்ந்த இவா்களிடமிருந்து 34 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன
அதில் ஒருவா் 18 வயதுக்கு உட்பட்டவா் என்பதால், அவரை சிறுவா் சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனா். கைதானவா்கள் திருவண்ணாமலையை சோ்ந்த நடுப்பையன் அண்ணாதுரை(26), சுதாகா்(20) என்பது விசாரணையில் தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...