ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

71,000 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்

 திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 71,000 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:42 pm

DIN

 திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 71,000 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலையில் வார இறுதி நாள்களில் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளதால், விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தா்ம தரிசனத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால், பக்தா்கள் அதிக அளவில் ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனா்.

தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால், டிக்கெட் இல்லாமலும் பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். திருமலைக்கு வரும் பக்தா்கள் ஆதாா் அட்டையை காட்டிய பின்னா், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு, தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா். இதனால், தரிசனத்துக்கு 7 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. வியாழக்கிழமை காலை 71,914 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். 37,234 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

தரிசனம், வாடகை அறைகள் உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 1800-425-4141, 93993 99399 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.