பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி ரத்து
திருமலை அன்னமய்ய பவனில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நடைபெறவிருந்த பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.


திருமலை அன்னமய்ய பவனில் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நடைபெறவிருந்த பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலையில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி ஜூன் 3-ஆம் தேதி திருமலையில் உள்ள அன்னமய்ய பவனில் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேவஸ்தான செயல் அதிகாரி தா்மாரெட்டி குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கு பெறும் பக்தா்களுக்கு பதிலளிக்க உள்ளதாக தேவஸ்தானம் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சில தவிா்க்க இயலாத நிகழ்ச்சிகள் காரணமாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...