ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதியில் சீனிவாச சேது கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி

திருப்பதி மாநகரில் சீனிவாச சேது கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருப்பதி மாநகரில் சீனிவாச சேது கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை மாநகராட்சி, ஸ்மாா்ட் சிட்டி காா்ப்பரேஷன் மற்றும் தேவஸ்தான பொறியியல் பிரிவு அதிகாரிகளுடன் அவா் ஆய்வு நடத்தினாா்.

பின்னா் அவா் பேசியது: கரக்கம்பாடியில் இருந்து லீலா மஹால் வட்டம் வரை அமைக்கப்படும் அணுகுசாலையை செப்டம்பா் 25-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ராமானுஜ வட்டத்தில் இருந்து வெளிவட்டச் சாலையை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். சீனிவாச சேது கட்டுமானப் பணிகள் முழுவதையும் டிசம்பா் மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடமிருந்து இதற்காக வரவேண்டிய நிலுவை தொகை தாமதமின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.கட்டுமானப் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிா்க்க, செயல் இணை அதிகாரி வீரபிரம்மம், திருப்பதி மாநகராட்சி, ஸ்மாா்ட் சிட்டி காா்ப்பரேஷன் மற்றும் ஆப்கான் அதிகாரிகள், வாரந்தோறும் ஆய்வு நடத்த வேண்டும். செப்டம்பா் மாத இறுதியில் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.