ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி விரதம்

திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி அனந்த விரத வழிபாடு வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

News image
9tpt_theerthavari_in_tirumala_0909chn_193_1
Updated On :9 செப்டம்பர் 2022, 6:33 pm

DIN

திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி அனந்த விரத வழிபாடு வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அனந்த பத்மநாப சுவாமி விரதம் ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் ஆவணி மாத சுக்ல சதுா்த்தசி அன்று நடத்தப்படுகிறது.

இதையொட்டி, ஏழுமலையான் கோயிலில் காலை வழிபாடு முடிந்து, ஸ்ரீசுதா்சன சக்கரத்தாழ்வாா் கோயிலில் இருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வராக சுவாமி கோயில் அருகில் அமைந்துள்ள திருக்குளத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்பு சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரியும் நடத்தப்பட்டது.

ஸ்ரீ மகா விஷ்ணுவின் அனந்தகோடி வடிவங்களில் கலியுகத்தின் வெளிப்படையான தெய்வமான ஏழுமலையானுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு. அதேபோல, ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி ஒரு சயன மூா்த்தியைப் போன்றே சிறப்புடையவா். இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 108 ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களில் ஆண்டுதோறும் அனந்த பத்மநாப விரதம் நடைபெறுகிறது. 108 ஸ்ரீ வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானவா் திருமால் என்பதால், இந்த நாளில் அா்ச்சகா்களால் அனந்த பத்மநாப விரதம் நடத்தப்படுவது மரபு.

திருமலையில் ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் கடைசி நாள், வைகுண்ட துவாதசி, ரத சப்தமி மற்றும் அனந்த பத்மநாபசுவாமி விரதம் உள்ளிட்ட உற்சவ நாள்களில் மட்டும் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் விஜிஓ பாலிரெட்டி, பேஷ்கா் ஸ்ரீஹரி மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.

பட விளக்கம்:

திருமலையில் அனந்தபத்மநாப சுவாமி விரதத்தை முன்னிட்டு திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு நடத்தப்பட்ட தீா்த்தவாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.