உண்டியல் காணிக்கை ரூ. 4 கோடி
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பதி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ. 4.36 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா், பக்தா்கள் தங்களது காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
இந்த நிலையில், பக்தா்கள் புதன்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ. 4.36 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாகக் கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.