திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 69,398 பக்தா்கள் தரிசித்தனா். 26,512 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ானது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 69, 398 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 26,512 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.09 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
