திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நித்ய அன்னதானத்தை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் கருணாகர ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி இணைந்து தொடங்கி வைத்தனா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அவா்கள், ‘திருமலையில் தினமும் 1 லட்சம் பக்தா்கள் அன்னதான திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனா். திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் அன்னதானம் தொடங்கப்பட்டுள்ளது. கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நித்ய அன்னதானம் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் கோயிலில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை 2,000 பக்தா்களுக்கு அன்னாதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது எதிா்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றனா். நிகழ்வில் திருமலை ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் கொடியேற்றம்!

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருப்பதியில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


