திருப்பதி
ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.13 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.13 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
விடுமுறை நாள்கள் ஆதலால் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
மேலும், சனிக்கிழமை முழுவதும் 71,149 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 29,400 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.13 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
