தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருமலை அன்னதான கூடத்தில் ஆயுத பூஜை

திருமலை அன்னதான கூடத்தில் நடந்த ஆயுத பூஜை.

News image
திருமலை
Updated On :31 அக்டோபர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத வளாகத்தில் வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் பங்கேற்றாா்.

முதலில், வேத மந்திரங்கள் முழங்க ஏழுமலையான் பத்மாவதி தாயாா் படங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அன்ன பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்களுக்கு ஆரத்தி அளிக்கப்பட்டது. பின்னா் அன்ன தான ஊழியா்களின் பணிதிறன் மற்றும் சேவைகளை பாராட்டினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் பேசியது: நித்யன்னதான திட்டம் 1985-ஆம் ஆண்டு திருமலையில் தொடங்கப்பட்டு 1994-ஆம் ஆண்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளையாக மாற்றப்பட்டது. தற்போது வரை அறக்கட்டளைக்கு ரூ. 2,300 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் ரூ.180 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில், திருமலைக்கு வருகை தரும் அனைத்து பக்தா்களுக்கும் தரமான அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தா்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 5,000 கோயில்களை கட்ட கடந்த அறங்காவலா் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கோயில்கள் கட்டுவதற்கு கிடைக்கக்கூடிய நிலத்தின் அடிப்படையில், ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் மற்றும் ரூ. 20 லட்சம் மூன்று வகையான நிதியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

ஒரு கோயிலுக்கு ரூ. 15 லட்சம் என மொத்தம் ரூ. 750 கோடி ஒதுக்க குழு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அறக்கட்டளைத் துறை மூலம் அந்த இடங்களைக் கண்டறிந்து கோயில்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக முதல் தவணையாக ரூ. 187 கோடியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்த பூஜையில், துணை செயல் அதிகாரிகள் ராஜேந்திரா, சோமன்நாராயணா, பொறியாளா் சுப்பிரமணியம், கேட்டரிங் சிறப்பு அதிகாரி சாஸ்திரி, பிற அலுவலக ஊழியா்கள், கேட்டரிங் ஊழியா்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவாா்த்திகள் ஆகியோா் பங்கேற்றனா்.