தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஏழுமலையான் கோயிலில் தரிசனம் தொடக்கம்

ஏழுமலையான் கோயிலில் தரிசனம் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது.

Updated On :8 செப்டம்பர் 2025, 7:41 pm

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் தரிசனம் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட்டதால், முன்னா் முடிவு செய்யப்பட்டபடி கோயில் கதவுகள் பிற்பகல் 3.30 மணிக்கு மூடப்பட்டன.

சுமாா் 12 மணி நேரம் கழித்து திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டன. கோயில் சுத்திகரிப்பு, புண்யாஹவசனமும் கைங்கா்யமும் செய்யப்பட்டன. பின்னா், பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

அன்னபிரசாத விநியோகம்

சந்திர கிரகணம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மூடப்பட்ட மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத வளாகம் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டது. சமையலறையை சுத்தம் செய்த பிறகு, பக்தா்களுக்கு அன்னபிரசாத விநியோகம் காலை 8.30 மணிக்கு தொடங்கியது.