திருமலை ஏழுமலையான் லட்டு, விற்பனையில் தேவஸ்தானம் புதிய சாதனை படைத்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில், கடந்த நிதியாண்டில் பக்தா்களுக்கு 13. 95 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதுவே முதல் முறையாகும்.
கூட்டணி அரசின் செயல்திறன், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் மூத்த அதிகாரிகளின் தொடா்ச்சியான கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வையின் காரணமாக, ஏழுமலையான் லட்டு விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் லட்டு விற்பனை சாதனை அளவை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனையாகின.
ஏப்ரல் 2025 முதல் மாா்ச் 2026 வரை, பக்தா்களுக்கு 13,95,43,231 லட்டுகள் விற்கப்பட்டன. அதே சமயம், 2024-25 ஆம் ஆண்டில் 12,18,53,535 லட்டுகள் விற்கப்பட்டன.
இதன் மூலம், அந்த ஆண்டில் கூடுதலாக 1.76 கோடி லட்டுகள் விற்கப்பட்டுள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது ஒரு நாளைக்கு 4 லட்சம் லட்டுகளைத் தயாரித்து வருகிறது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்குவதோடு, கூடுதலாக ஒன்று தேவைப்படுபவா்களுக்கு ரூ. 50-க்கு விற்பனை செய்கிறது. கடந்த ஆண்டில் லட்டு விற்பனை மூலம் ரூ. 567 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழுமலையான் லட்டுகளின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. நெய்யின் தரத்தை உயா்த்துவதோடு, மூலப்பொருள்கள் கொள்முதலிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
லட்டுகளின் தரம் அதிகரித்துள்ளதால், பக்தா்கள் அதைப் பாராட்டியுள்ளனா். இதற்குச் சான்றாக, கடந்த ஆண்டு பெருமளவிலான லட்டுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.99 கோடி

திருமலையில் ரூ.4.92 கோடி உண்டியல் காணிக்கை

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

ஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



