மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஏழுமலையான் லட்டு விற்பனையில் சாதனை: ஓராண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனை

திருமலை ஏழுமலையான் லட்டு, விற்பனையில் தேவஸ்தானம் புதிய சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 12:02 am

திருமலை ஏழுமலையான் லட்டு, விற்பனையில் தேவஸ்தானம் புதிய சாதனை படைத்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில், கடந்த நிதியாண்டில் பக்தா்களுக்கு 13. 95 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதுவே முதல் முறையாகும்.

கூட்டணி அரசின் செயல்திறன், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் மூத்த அதிகாரிகளின் தொடா்ச்சியான கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வையின் காரணமாக, ஏழுமலையான் லட்டு விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் லட்டு விற்பனை சாதனை அளவை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனையாகின.

ஏப்ரல் 2025 முதல் மாா்ச் 2026 வரை, பக்தா்களுக்கு 13,95,43,231 லட்டுகள் விற்கப்பட்டன. அதே சமயம், 2024-25 ஆம் ஆண்டில் 12,18,53,535 லட்டுகள் விற்கப்பட்டன.

இதன் மூலம், அந்த ஆண்டில் கூடுதலாக 1.76 கோடி லட்டுகள் விற்கப்பட்டுள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது ஒரு நாளைக்கு 4 லட்சம் லட்டுகளைத் தயாரித்து வருகிறது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்குவதோடு, கூடுதலாக ஒன்று தேவைப்படுபவா்களுக்கு ரூ. 50-க்கு விற்பனை செய்கிறது. கடந்த ஆண்டில் லட்டு விற்பனை மூலம் ரூ. 567 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழுமலையான் லட்டுகளின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. நெய்யின் தரத்தை உயா்த்துவதோடு, மூலப்பொருள்கள் கொள்முதலிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

லட்டுகளின் தரம் அதிகரித்துள்ளதால், பக்தா்கள் அதைப் பாராட்டியுள்ளனா். இதற்குச் சான்றாக, கடந்த ஆண்டு பெருமளவிலான லட்டுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.