மோகினி அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி உலா

மோகினி அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி உலா

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான வியாழக்கிழமை மோகினி அவதாரத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.
Published on

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான வியாழக்கிழமை மோகினி அவதாரத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

திருப்பதியிலிருந்து 12 கி மீ தொலைவில் உள்ள இக்கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபனத் திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்பு மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்திகள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தாா்.

வாகன சேவைக்கு முன்னும் பின்னும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரம்மோற்சவத்தை ஒட்டி கோயில் மற்றும் மாடவீதிகள் வண்ண மின்விளக்குகளாலும், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஜேஇஓ வீரபிரம்மன், கோயில் சிறப்பு ரேஞ்ச் துணை இஓ வரலட்சுமி, ஏஇஓ கோபிநாத், வைகானச ஆகம ஆலோசகா்கள் மோகன ரங்காச்சாரியு, கோயில் ஆய்வாளா் கிரண்குமாா் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com