பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பல்லக்கில் சோமாஸ்கந்தமூா்த்தி வீதியுலா

பல்லக்கில் எழுந்தருளிய சோமாஸ்கந்த மூா்த்தி.

News image

பல்லக்கில் எழுந்தருளிய சோமாஸ்கந்த மூா்த்தி.

Updated On :12 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான வியாழக்கிழமை பல்லக்கில் சுவாமி எழுந்தருளினாா்.

திருப்பதி கபிலதீா்த்தத்தில் எழுந்தருளியுள்ள சுவாமிக்கு மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை கபிலேஸ்வர சுவாமி சோமாஸ்கந்தமூா்த்தியாய் பல்லக்கிலும், காமாட்சி அம்மன் தனியாக திருச்சி வாகனத்திலும் வீதியுலா கண்டருளினா்.

பின்னா், சோமாஸ்கந்தமூா்த்தி மற்றும் காமாட்சி அம்மனுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில், குருக்கள் உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனா்.

பின்னா் ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்திகள் இரவு வாகனத்தில் மாடவீதியில் உலா வந்தனா்.

இதில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, கண்காணிப்பாளா் சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள், பிற அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.