ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.5.21 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக நீண்ட நாள்களுக்கு பின்னா் ரூ.5.21 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை

திருமலை
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக நீண்ட நாள்களுக்கு பின்னா் ரூ.5.21 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 31 அறைகளும் நிறைந்து கிருஷ்ண தேஜா வரை காத்திருந்தனா்.
தா்ம தரிசனத்துக்கு 15 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
மேலும் திங்கள்கிழமை முழுவதும் 82, 483 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 30, 777 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.5.21 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...