ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:12 am

DIN

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பன்னீர், பூ, மஞ்சள், பால், பழம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட பிரதோஷப் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், கோயிலின் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு: இந்தப் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வேட்டவலம்: இதேபோல, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழைமைவாய்ந்த வேட்டவலம் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்மாள், பிரதோஷ நந்திக்கு பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், வில்வம், அருகம்புல், பூ ஆகியவற்றைக் கொண்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
இதர ஊர்களில்...: இதேபோல, தானிப்பாடி, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சிவன் கோயில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.