மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாள் விழா

செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:09 am

DIN

செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு நல்லாசிரியர் அன்பழகன் தலைமை வகித்தார்.
 சாரணஆசிரியர் பாலக்குமார்  வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார் கலந்து கொண்டு பேரணியை தொடக்கி வைத்தார்.
பேரணியில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு மேல்வணக்கம்பாடி கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.
பின்னர், பள்ளி வளாகத்தை பேரணி வந்தடைந்ததைத் தொடர்ந்து, அங்கு மாணவர்கள்,  ஆசிரியர்கள் அனைவரும் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.