பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

போர்ச் சூழலால் தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் விலை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயா்ந்தது.

News image

கச்சா எண்ணெய்

Updated On :3 மார்ச் 2026, 8:48 pm IST

சிங்கப்பூர்: மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயா்ந்து வருகிறது.

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலிய மோதல் விரிவடைந்து வருவதாலும், ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாலும், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதை தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை $3க்கு மேல் உயர்ந்ததுள்ளது.

இதன் எதிரொலியாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில், பீப்பாய் ஒன்றுக்கு $80.89 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 4.1 சதவீதம் அதிகம். மேலும் திங்கள்கிழமை, ஒப்பந்தம் $82.37 ஆக உயர்ந்தது வா்த்தகமானது.

மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் விலை $2.55 உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு $73.78 ஆக உள்ளது. ஜூன் 2025 க்குப் பிறகு இது அதன் அதிகபட்ச விலை என்ற அளவில் உள்ளது.

அதிகரித்து வரும் மத்திய கிழக்கு மோதல், உள்ளிட்டவையால், வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்று நிபுணா்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒருவேளை, ஹோா்முஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டாலோ அல்லது வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகள் சேதமடைந்தாலோ, கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயர வாய்ப்புள்ளது. மாறாக, மோதல் விரைவில் முடிவுக்கு வந்தால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.