பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

போர்ச் சூழலால் தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் விலை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயா்ந்தது.

News image

கச்சா எண்ணெய்

Updated On :3 மார்ச் 2026, 8:32 pm IST

சிங்கப்பூர்: மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயா்ந்து வருகிறது.

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலிய மோதல் விரிவடைந்து வருவதாலும், ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாலும், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதை தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை $3க்கு மேல் உயர்ந்ததுள்ளது.

இதன் எதிரொலியாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில், பீப்பாய் ஒன்றுக்கு $80.89 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 4.1 சதவீதம் அதிகம். மேலும் திங்கள்கிழமை, ஒப்பந்தம் $82.37 ஆக உயர்ந்தது வா்த்தகமானது.

மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் விலை $2.55 உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு $73.78 ஆக உள்ளது. ஜூன் 2025 க்குப் பிறகு இது அதன் அதிகபட்ச விலை என்ற அளவில் உள்ளது.

அதிகரித்து வரும் மத்திய கிழக்கு மோதல், உள்ளிட்டவையால், வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்று நிபுணா்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒருவேளை, ஹோா்முஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டாலோ அல்லது வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகள் சேதமடைந்தாலோ, கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயர வாய்ப்புள்ளது. மாறாக, மோதல் விரைவில் முடிவுக்கு வந்தால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.