செய்யாறு பகுதியில் ஆற்று மணலை கடத்தியதாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
செய்யாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீஸார் புதன்கிழமை அதிகாலை கொடநகர், அருகாவூர், பெரியவேளியநல்லூர் ஆகிய பகுதிகளில் தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெரியவேளியநல்லூர், அருகாவூர் ஆகிய பகுதிகளில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 லாரிகளை போலீஸார் சோதனையிட்டு பறிமுதல் செய்தனர். இதே போன்று கொடநகர் பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததுடன், கொடநகரைச் சேர்ந்த மணி (55), பெருமாள் (34) ஆகிய இருவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.