வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

செங்கத்தில் காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 11:57 pm

DIN

செங்கத்தில் காவல் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், செங்கம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, செங்கம் துக்காப்பேட்டையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக போளூர் சாலை வரை பேரணியாகச் சென்றனர்.
அப்போது, இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதுடன், ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனங்களை ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டும், செல்லிடப்பேசியில் பேசியபடியும் வாகனங்களை ஓட்டக்கூடாது என மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சாலை விபத்துகளை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள் விநியோகித்துச் சென்றனர்.
பேரணியில் காவல் ஆய்வாளர்கள் செங்கம் கர்ணன், மேல்செங்கம் பூபதி மற்றும், போலீஸார் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.