திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆதிதிராவிடர் சமுதாய ஏழைகள் இலவச வீட்டுமனைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகள், இலவச வீட்டுமனை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:55 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகள், இலவச வீட்டுமனை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரந்தரமாக வசித்து வரும் வீடற்ற, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வரும் ஏழை ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2018-2019 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட உள்ளது.
எனவே, வீட்டுமனை தேவைப்படும் நிலமற்ற, சொந்த வீடு இல்லாமல், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப் பகுதியை அமைவிடமாகக் கொண்டு வசிக்கும் வீட்டுமனை தேவைப்படும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த பயனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கலாம்.
மேலும், ஆதிதிராவிடர் நலத் துறைக்கு அரசின் வழிகாட்டி மதிப்புத் தொகைக்கோ அல்லது மாவட்ட ஆட்சியரின் நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் நிர்ணயிக்கப்படும் தொகைக்கோ ஆதிதிராவிட நலத் துறைக்கு நிலம் வழங்க விருப்பம் உள்ள நில உரிமையாளர்களும் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.