வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தொண்டு நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் விழா

திருவண்ணாமலையை அடுத்த தல்லாகுளம் கிராமத்தில் உள்ள போப் தொண்டு நிறுவனத்தில் 32-ஆவது ஆண்டு கிறிஸ்துமஸ்  விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:51 am IST

திருவண்ணாமலையை அடுத்த தல்லாகுளம் கிராமத்தில் உள்ள போப் தொண்டு நிறுவனத்தில் 32-ஆவது ஆண்டு கிறிஸ்துமஸ்  விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு அந்த நிறுவனர் தலைவரும், வழக்குரைஞருமான ரொசாரியோ தலைமை வகித்தார். தொண்டு நிறுவனத் திட்ட மேலாளர் ஜெஸ்டின்குமார் வரவேற்றார். தொண்டு நிறுவன முன்னாள் தலைவர்  லூர்துசாமி, கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டினார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெய் செளந்தரம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, ஏழை-எளியோருக்கு இலவச வேட்டி-சேலைகள் உள்பட 300 பேருக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினார்.
விழாவில், பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், நடனம், தப்பாட்டம், சாட்டைக்குச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  விழாவில் போப் தொண்டு நிறுவன ஊழியர்கள், வழக்குரைஞர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.