தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:55 am IST

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலர் அமுதா, மாவட்டப் பொருளாளர் எம்.எஸ்.நைனாக்கண்ணு, நகரச் செயலர் ஜெ.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், திருவண்ணாமலை நகரின் அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர ரூ.20 கோடி ஒதுக்கிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கிரிவலப் பாதையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சோடியம் விளக்குகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கிய சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோருக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திருவண்ணாமலை நகரில் ஒரு பூத் கமிட்டிக்கு 18 பேர், 200 வாக்காளர்களுக்கு 5 பேர் என பொறுப்பாளர்களை நியமிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அமைப்பு சாரா ஓட்டுநரணி மாவட்டச் செயலர் சுனில்குமார், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி துணைச் செயலர் எஸ்.ஆர்.பழனி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலர் சத்யபிரகாஷ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.பவன்குமார், முன்னாள் மாவட்டப் பிரதிநிதி டிஸ்கோ எஸ்.குணசேகரன், நகர துணைச் செயலர் ஆர்.அரசப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.