திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அரசுப் பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு வட்டம், மாளிகைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரது மகன் மதன்குமார் (17) . இவர் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மதன்குமார் சடலமாகக் கிடந்தார். பள்ளி வளாகத்தில் நடைப் பயிற்சிக்குச் சென்ற பொதுமக்கள், இதுகுறித்து செய்யாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் மதன்குமாரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக செய்யாறு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதன்குமாருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசியை பெற்றோர் வாங்கிக் கொடுத்தனராம். அவர் பள்ளிப் பாடங்களைப் படிக்காமல் செல்லிடப்பேசியில் தொடர்ந்து விளையாடி வந்தாராம்.
இதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மதன்குமார், சனிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. சனிக்கிழமை இரவு அவர் பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
மதன்குமாரின் சட்டைப் பையில் ரூ.6 ஆயிரம் ரொக்கம் இருந்தது. அந்தப் பணம் புதிதாக வாங்கிய செல்லிடப்பேசியை விற்றதில் கிடைத்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்






