வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பள்ளி வளாகத்தில் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அரசுப் பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :23 ஜூலை 2018, 9:55 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் அரசுப் பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு வட்டம், மாளிகைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரது மகன் மதன்குமார் (17) . இவர் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மதன்குமார் சடலமாகக் கிடந்தார். பள்ளி வளாகத்தில் நடைப் பயிற்சிக்குச் சென்ற பொதுமக்கள், இதுகுறித்து செய்யாறு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் மதன்குமாரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக செய்யாறு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதன்குமாருக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசியை பெற்றோர் வாங்கிக் கொடுத்தனராம். அவர் பள்ளிப் பாடங்களைப் படிக்காமல் செல்லிடப்பேசியில் தொடர்ந்து விளையாடி வந்தாராம்.
இதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மதன்குமார், சனிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. சனிக்கிழமை இரவு அவர் பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
மதன்குமாரின் சட்டைப் பையில் ரூ.6 ஆயிரம் ரொக்கம் இருந்தது. அந்தப் பணம் புதிதாக வாங்கிய செல்லிடப்பேசியை விற்றதில் கிடைத்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.