தேமுதிக போளூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேத்துப்பட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சினிமாத் துறைக்கு வந்து 40ஆண்டுகள் ஆனதையொட்டி, அந்தக் கட்சி சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் நடைபெறும் மண்டல மாநாட்டில் கட்சியினர் கலந்து கொள்வது குறித்து இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், போளூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு போளூர் தொகுதிப் பொறுப்பாளர் ஏழுமலை தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சங்கர், ஒன்றியச் செயலர்கள் பன்னீர்செல்வம், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச் செயலர் அக்பர், மாவட்டச் செயலர் கோபிநாதன், மாநில தொண்டரணி துணைச் செயலர் ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு, மண்டல மாநாட்டில் தொண்டர்கள் கலந்து கொளவது குறித்துப் பேசினர். மாவட்ட அவைத் தலைவர் சுப்பிரமணி, தலைமைக் கழகப் பேச்சாளர் குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

