வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்

குழந்தை கடத்தல் தொடர்பாக, வந்தவாசியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீஸார் விநியோகித்தனர்.

Updated On :14 மே 2018, 10:52 pm

குழந்தை கடத்தல் தொடர்பாக, வந்தவாசியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீஸார் விநியோகித்தனர்.
வட மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாக பரவிய வதந்தியால், அப்பாவிகள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையொட்டி, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையில், வந்தவாசி புதிய பேருந்து நிலையம், ஐந்து கண் பாலம், தேரடி ஆகிய இடங்களில் வந்தவாசி தெற்கு போலீஸார் துண்டு பிரசுரங்கள் அண்மையில் விநியோகித்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் வரதராஜ் தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீஸார் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர். மேலும், சந்தேகப்படும்படியான நபர்கள் தென்பட்டால் அருகே உள்ள காவல் நிலையத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.