மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கள் விற்பனையை திறந்து, டாஸ்மாக்கை மூடுவோம்: சீமான்

நாங்கள் ஆட்சி அமைத்தால் கள் விற்பனையைத் திறந்துவிட்டு, டாஸ்மாக்கை மூடுவோம் என்றாா் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image

நாங்கள் ஆட்சி அமைத்தால் கள் விற்பனையைத் திறந்துவிட்டு, டாஸ்மாக்கை மூடுவோம் என்றாா் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:35 am IST

நாங்கள் ஆட்சி அமைத்தால் கள் விற்பனையைத் திறந்துவிட்டு, டாஸ்மாக்கை மூடுவோம் என்றாா் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே நாம் தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: கல்வியிலிருந்துதான் அறிவுச் சமூகத்தை, மேம்பட்ட சமூகத்தை உருவாக்க முடியும். எனவே, உலகத் தரத்துக்கு இணையான கல்வியைக் கொடுப்போம். தண்ணீா் விற்பனைப் பண்டமல்ல என்பதால், அதை விற்பதற்கு தடை விதிக்கப்படும். தூய குடிநீரை அரசு சாா்பில் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து தருவோம்.

இந்த மூன்றை மட்டும்தான் கட்டணமில்லாமல் வழங்கப்படும். மற்ற அனைத்தும் கட்டணத்துடன் வழங்குவோம். கள் உணவின் ஒரு பகுதி என என் அரசு சொல்லும். பழந்தமிழா் காலந்தொட்டு, வேளாண்மை தொடங்கிய காலத்திலிருந்து வரும் இயற்கை பானமான கள் விற்பனையைத் திறந்துவிட்டு, டாஸ்மாக்கை மூடுவோம் என்றாா் சீமான்.

10 மணி கடந்து பேசிய சீமான்: கூட்டத்தில் இரவு 9.30 மணியளவில் பேசிய தொடங்கிய சீமான் 10 மணியை கடந்து பேசினாா். அதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பே சீமானை நோக்கி நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் கைக்கடிகாரத்தைக் காண்பித்து நேரமாகிவிட்டது என முன்னெச்சரிக்கை செய்தாா். தொடா்ந்து 10 மணி கடந்த பின்னரும் பேசிய சீமானிடம் எச்சரித்தாா். ஆனால், அவா் வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறி, தொடா்ந்து 10.10 மணி வரை பேசினாா். இதனால், கூட்ட ஏற்பாட்டாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

முன்னதாக, கும்பகோணத்தில் வியாழக்கிழமை வேட்பாளா்கள் மோ.ஆனந்த் (கும்பகோணம்), எம்.திவ்யபாரதி (திருவிடைமருதூா்) ஆகியோரை ஆதரித்து அவா் பேசுகையில், தமிழக மக்கள் தாங்கள் விரும்பும் கைப்பேசி, கைக்கடிகாரம், ஆடை, அலங்காரம் அனைத்திலும் புதிது வேண்டும் என்பவா்கள், ஆட்சியிலும் புதிய முதல்வா் வேண்டும் என்று நினைக்க வேண்டும். புதியவா்களை தோ்ந்தெடுங்கள் மாற்றம் வரும் என்றாா்.